Tuesday, January 24, 2012

திருஞானசம்பந்தர் பாடிய குழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம் ( குழந்தைப்பேறு இல்லாதவர் கண்டிப்பாக படிக்க வேண்டிய சிவ பதிகம் )




மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண்கள் தம்பதிகளின் மனவருத்தம் வருந்தத்தக்கது .

கீழே யாம் பதிவு செய்துள்ள பதிகம் சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் புகழ் பெற்ற சைவத் திருத்தலமான திருவெண்காட்டில் பாடப்பெற்ற அருமையான பதிகமாகும் . இப்பதிகத்தை தெய்வச் சேக்கிழார் " செப்பரும் பதிக மாலை " எனப் போற்றியுள்ளார் . இவ்வளவு புகழ் பெற்ற திருவெண்காட்டுப் பதிகத்தைப் பாடித்தான் நம் சைவ சித்தாந்த ஞானக்களிறு எனப் போற்றப்படும் "மெய்கண்டார்" பிறந்தார் என்பது வரலாற்று ஆவனமாகும்

. இவ்வளவு சிறப்பு மிக்க சிவபதிகத்தை பாடுவதால் குழந்தை வரம் கிட்டும் என்பதில் ஐயமில்லை .

திருவெண்காடு பண் - சீகாமரம்

திருஞானசம்பந்தர் 2 ஆம் திருமுறை

கண் காட்டு நூதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. 1

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீ வினையே.2

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.3

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூ மறையக்
கடல் விண்ட கதிர்முத்த நகைகாட்டும் காட்சியதே.4

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக் கீழ்
மாலைமலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்
மேலடர் வெங் காலனுயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே.5

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. 6

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரை மேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம் பணிய
மிக்கதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கணுடை இறையவனே.7

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம் நெரித்தன்று அருள் செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்KA
விண்மொய்த்த பொழில் வரி வண்டு இசைமுரலும் வெண்காடே 8

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற் கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.9

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர் பிறிமின் அறிவுடையீர் இது கேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர் என்று உணருமினே.10

தண்பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண் காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொழிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.11

எப்படி பாடுவது :

சிவ பேறு பெற்ற குழந்தை விரும்பும் தம்பதிகள் திருவெண்காடு சென்று முக்குள நீராடி சிவபெருமானை மேற்கண்ட பதிகத்தை மனமுருகப்பாடி வழிபட்டால் நல்ல சிவஞானம் பெற்ற குழந்தை பிறந்து அடுத்த தலைமுறை வளரும் என்பது நிச்சயம் .

சரி ஏழ்மை நிலையால் திருவெண்காடு செல்லமுடியாதவர்கள் உங்கள் ஊரில் அமைந்துள்ள சிவலாயத்தில் சோமவாரம் என அழைக்கப்படும் திங்கட்கிழமை நாட்களிலோ அல்லது பிரதோஷ நாளிலோ மனமுருக வேண்டி வணங்கி வாருங்கள் .பதிகத்தை படிக்க முடியாதவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நன்பர்கள் இப்பதிகத்தை அவர்களுக்காக பாடுங்கள் . பலன் கண்கூடு

முடிவு :

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் எல்லா விஷயங்களையும் சாதரணமாக எழுதி வைக்கவில்லை. எட்டு வருடங்களாக குழந்தையில்லா இரு தம்பதிகள் இப்பதிகத்தை பாடி குழந்தை வரம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதது . நம்பிக்கையுடன் இதை நகல் எடுத்து படியுங்கள் .குழந்தைப்பேறு பெற்ற பின் எமக்கு மெயில் செய்யுங்கள் .

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கு சிவபெருமான் குழந்தைவரம் வேண்டுகிற உங்களுக்கு நற் குழந்தைப்பேறு கிடைக்க அருள்புரிய வேண்டுமென மனமுருக வேண்டி முடிக்கிறேன் .
ஓம் சிவாய நமஹ

2 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

வாழ்க வளமுடன்

ஜி வாழ்த்துகள் உங்கள் ஆன்மிக சேவை தொடர ,
உங்கள் முயற்ச்சி வெற்றி பெற .

தில்லை கூத்தன்
அடித்தாள் இறைஞ்சும்
தொண்டர்

என்றும் நட்புடன்
யுவராஜா


ஓம் சிவாய நம

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

உங்களின் ஊக்குவிப்பே நல்ல படைப்புகளை அருள வாய்ப்பளிக்கிறது.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...